திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !



மரணம்

ஒரு ஊமைக் குசும்பன் !

சொல்லாமல் கொள்ளாமல்

உயிரை வெல்லாமல்

போகாதக்

கொடூரக் குசும்பன்!

கடவுளைக்

கண்டு பயமில்லை எனக்கு

நாத்திகம் சுவாசிப்பதால் !

மரணத்தைப் பார்த்தோ

தினம் அஞ்சுகிறேன் !

காற்றைச் சுவாசிப்பதால் !

எந்நேரமும் குசும்பன்

அதைப்பறிக்க முனைவான் என்பதால் !


என் வாழ்வின் கடன் நிமிடங்கள்

வெட்டியாக வெட்டியானுக்கு இரையாகும்

என்று அஞ்சுகிறேன் !


இந்தக்  குட்டி வாழ்க்கையில்

வெட்டி நிமிடங்களை வெறுக்கிறேன்

கவிதையாய் அதைச்  செதுக்க

முனைகிறேன்


மரணம்

ஒரு ஊமைக் குசும்பன் !

என்னையும் கவிதை

எழுத வைத்துவிட்டான் !

Comments

Popular posts from this blog

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !