திருட்டு 113 - இது தான் சமாச்சாரமா ?






புரிகிறது 

வெள்ளை நிறம் 

ஏன் 

நெஞ்சு நிமிர்த்தி 

கர்வமாய்த் 

திரிகிறது என்று!

உன் அழகின் அடையாளமாய் 

அங்கீகாரம் அடைந்தது கண்டு 



தெரிகிறது

மென்மை 

ஏன் 

தன்னிலை மறந்து 

வானுக்கும் மண்ணுக்கும் 

துள்ளுகிறது என்று !

உன் 

அழகின் கணக்கில் 

சேர்ந்து 

கூட்டலோடும் பெருக்கலோடும் 

உறவாட 

வாய்ப்புக்  கிடைத்ததைக் கண்டு 


விளங்குகிறது 

வேகமாய் நகரும் 

வாழ்க்கை 

ஏன் 

வெட்கிக் குனிந்து 

நிற்கிறது என்று !

மெதுவாய் மெத்தனமாய் 

நீ நகர்ந்து 

அதை நகைப்பதை உணர்ந்து 


உணர்கிறது 

உன் போல் 

பறவை இனம் 

எதற்காக 

பூமியில் உலவுகிறது என்று !

இது போன்ற 

கவிதை 

கரு உரு கொண்டு 

உன்னை ரசிக்க வேண்டும் என்று !






Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !