திருட்டு 68 - குழந்தைப் புராணம்


அங்கு ஏன்

கர்த்தர்

சிவன்

விஷ்ணு

புத்தர்

அல்லா

எல்லாரும்

வரிசையில் நிற்கிறார்கள்

தெரிகிறதா  ?

குழந்தைத்  தூங்குகிறது

தேவ தரிசனம்

செய்ய வந்திருக்கிறார்களாம்!


வரிசையில்

நிற்கும்

அத்தனைக்

கடவுள்களிடமும்

ஒரு

கேள்வி

கேட்க வேண்டும் !

நிலாவை

சுத்தம்

செய்து

கருவறையில்

வைக்கிறார்களாமே ?


குழந்தையே !


அதென்ன

சிரிப்பை

அடி வயிற்றில்

அரைத்துக்

குலுங்கிக்  குலுங்கிச்

சிரிக்கிறாய் ?

வளர்ந்துக் கெட்டவர்களைப்

பார்த்து

நகைப்போ ?


தயவு செய்து

அப்படிப்

பார்க்காதே

என்

ஆன்மா

நிர்வாணமாகிக்

கூச்சப்படுகிறது!



Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !