திருட்டு 81 - ஆறாம் பொறி




மெய்

வாய்

கண்

மூக்கு

செவி

இந்த ஐம்பொறிகளுடன்

ஆறாம் பொறியாய்

இணைந்தவள் நீ !


ஓட முடியாமல்

களைத்துப் போன

ஒலி அதிர்வுகளை

இடம் விட்டு இடம்

ஊர் விட்டு ஊர்

நாடு விட்டு நாடு

கண்டம் விட்டு கண்டம்

சேர்த்தவள் நீ !


அரசர்களுக்குக் கூட

கிடைக்காத

சக்திகளை

இணையத்தின் இரக்கத்தால்

என் கைகளில்

தந்தவள் நீ !


என் கைகளுக்குள்

அடங்கி விடும்

மந்திரக் கோல் நீ !


பேராசை காதலி போல்

மனிதர்களின்

முகத்தைவிட

உன் முகத்தையே

அதிகம் 

 பார்க்கவைத்தவள் நீ !


 அடியே !

என் சக்களத்தி !

உன் சேலைக்குள்

என்னை 

மடக்கி வைத்தது போதும்

கொஞ்சம் வெளியே விடேண்டி !

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !