திருட்டு 84 - யார் சொல்வதைக் கேட்க?



காலப் புத்தகத்தில் முதல் பக்கம் :


யார் சொல்வதைக் கேட்க?

கற்கால மனிதன் நான் !

என் ஐம்பொறிகளின்

பேச்சைக் கேட்பேன்!


காலப் புத்தகத்தில் பல பக்கங்கள் கழித்து :


யார் சொல்வதைக் கேட்க?

விவசாயம் பிறந்ததும்

பிறந்தவன் நான் !

கடவுள்

சொல்வதைக் கேட்பேன்!


காலப் புத்தகத்தில் இன்னும் பலப் பக்கங்கள் கழித்து :


யார் சொல்வதைக் கேட்க ?

அரசனின் ஆணைக்கு

அஞ்சுபவன் நான்!

அரசனின்

கட்டளையைக் கேட்பேன்!



காலப் புத்தகத்தில் இன்றையப்  பக்கம் :


யார் சொல்வதைக் கேட்க ?

மக்களாட்சியின் மடியில்

பிறந்தவன் நான்!

என் உணர்வுகளின்

பேச்சைக் கேட்பேன்!



காலப் புத்தகத்தில் இன்னும் எழுதப்படாதப் பக்கம் :


யார் சொல்வதைக் கேட்க?

இணைய வளர்ச்சியின்

மகுடத்தில் உதித்தவன் நான் !

இணைய ரத்தத்தில்

ஓடும்

BIG DATA

உண்ணும்

ALGORITHMS

சொல்வதைக் கேட்பேன் !



Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !