திருட்டு 100 - நிறைவேற்றம்
ஒரு
எண்ணம்
சிறகு விரித்தது !
நூறு
கவிதைகளாய்
இன்று
முதுமை
அடைந்தது !
அந்த
எண்ணத்திற்கு நன்றி !
ஒரு
பார்வை
என்
குளத்தில்
கல்
எரிந்தது !
கல்
தொட்டதும்
குளத்தில்
கவி அலைகள்
திரண்டன !
வைரமுத்துவுக்கு
நன்றி !
ஒரு
உறவு
என்
கவிதைகளைப்
பதம் பார்த்துத்
தட்டிக்
கொடுத்தது !
கவிதைகள்
தன்னம்பிக்கைக்
கொள்ளச் செய்தது !
என்
துணைவிக்கு
நன்றி !
ஒரு
கலா தேவி
என்
பன்முக
உணர்வுகளுக்கு
உயிர்
கொடுத்தாள் !
கவிதைகள்
அள்ள
அட்சய பாத்திரம்
தந்தாள் !
கவிதா தேவிக்கு
நன்றி !
ஒரு
தாய்
என்
திருட்டுக்குக்
கை
கொடுத்தாள் !
தன்
மடியில்
என்
திருட்டுப்
பொருட்களை
ஏந்தினாள் !
தமிழுக்கு
நன்றி !
என்
திருட்டில்
அவளுக்குப்
பங்களிப்பதாக
வாக்களித்தேன் !
தமிழ்த் தாயே !
இந்த
நூறாம்
கவிதை
உனக்கே !
நேற்று
பெய்த
மழையில்
இன்று
முளைத்தக்
காளான் கவிஞன்
இந்தக்
கவித்திருடன்!
என்
திருட்டை
ரசித்த
மனங்களுக்கு
நன்றி !
என்
முதல்
பயணம்
நிறைவேறியது !
மீண்டும்
திருடும் வரை
திருட்டைக்
கைவிடுகிறேன் !
நன்றி !
Comments
Post a Comment