திருட்டு 94 - கவிதை ஒலி !



ஒலி

சிறகின்றி

ஊனமாய் நின்றது .

தன்

தொண்டைக்

குழியில்

ஊற்றிக் குழைத்து

மொழி சமைத்தான்

மனித மிருகம் !

ஒலியைச்

செதுக்கினான் !

மூளைகளின்

தூதுவனாய்

ஒலி

பதவி ஏற்றது !

மொழி ஆடை

உடுத்திக்கொண்டது !

ஒரு நாள்

காலத்தைக்

கடக்கும்

ஆசை கொண்டது மொழி !

தொழில்நுட்பத்தின்

தோள் சாய்ந்து

எழுத்தாய்

படுத்துக் கொண்டது !

காலத்தை

வென்றது !

மொழியின்

வாழ்வில்

ஒரு வினோத

பிரச்சினை ..

மூளைக்கு மட்டும் தான்

தூது செய்வாயா

என

இதயம்

உணர்வுகளைக் கொட்டி

விண்ணப்பம் செய்தது !


பிறந்தது

கவிதை !

ஒலி

இரட்டைப்  பதவியேற்பு

ஏற்றுக்கொண்டது !

மொழிக்கு மேல்

கவிதை மேலாடை

உடுத்திக் கொண்டது !


ஒலியால்

உருவான

கவி

தன் திறத்தால்

தனக்கென

செதுக்கிக் கொண்டது

இன்னொரு ஒலி

கவிதை ஒலி !


கேட்கிறதா

அந்தக்

கவிதை ஒலி ?

Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !