திருட்டு 99 - தம்பி !




நினைக்கவில்லை

கவிதை எழுதுவேன்

என

உனக்கு !


என்

ஈகோ

சட்டையைக்

கழற்றிவிட்டு

நம்

உறவுச்

செடிக்குத்

தண்ணீராக

இக்கவிதை !


அன்று !

ஆசை மிட்டாய்

திருடினாய்

என்று

அம்மாவிடம்

சாட்சி சொன்னேன் !

கவிதை எழுத

நினைவுக் கிடங்கை

தேடிப் பார்த்ததில்

இதைக் கண்டேன் !

காட்டிக் கொடுத்த

குற்ற உணர்ச்சி

அந்த

நினைவுக்கு

காவல்

செய்கிறது

இன்னும் !


அப்பாவின்

ஆணையில்

பள்ளி செல்வோம்

தினமும்

குட்டை

சைக்கிளில்

நீ முன்னே !

பாதுகாவலாக

நெட்டை

சைக்கிளில்

நான்

பின்னே !


மாவட்டத்தில்

முதல்

மாணவனாக

நீ

தேர்வானபோது

நானே

வென்றது

போல்

உணர்ந்தேன் !


இரு வேறு

துருவங்களாய்

நீயும்

நானும்

இன்று !

இறுக்கமான

நேரங்கள்

சிலவும்

உண்டு !

இருந்தாலும்

செல்வோம் !

தோள்பிடித்து !

வாழ்க்கையின்

முட்டுச்சந்து

வரை !


வாழ்க்கை

உனக்கு

ஒளித்து வைத்திருக்கும்

ரகசியங்கள்

நானறியேன் !

எதுவென்றாலும்

தளராதிருப்பாய்

அதை மட்டும்

அறிவேன் !



வருடங்கள்

பல

கண்டுவிட்டோம்

ஒன்றாய்!

அடங்காது

அத்தனையும்

ஒரு

கவிதைக்குள்

சொல்ல !


ஆனந்தமாய்

உன்

வாழ்க்கை

அமைய வாழ்த்துகிறேன் !

பெயருக்கேற்றாற்போல் !



Comments

Popular posts from this blog

திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !

திருட்டு 83 - நட்சத்திரங்கள் சேகரிக்க !