திருட்டு 39 - அருவி
நரைத்தக் கூந்தல் என்றாலும் உன் அழகு குறையவில்லை ! காலங்காலமாய் ஓடினாலும் உன் கால்கள் தளரவில்லை! மலைக் கணவனை மணந்தும் பார்ப்பவரை வசீகரிப்பதை நிறுத்தவில்லை ! ஆற்றுக் குழந்தையை பிரசவித்தும் உன் இளமை குறையவில்லை ! இத்தனை இருந்தும் நதியாய் கடலோடு கலக்கும்போது மட்டும் காணாமல் போய்விட்டாயே !