திருட்டு 113 - இது தான் சமாச்சாரமா ?
புரிகிறது வெள்ளை நிறம் ஏன் நெஞ்சு நிமிர்த்தி கர்வமாய்த் திரிகிறது என்று! உன் அழகின் அடையாளமாய் அங்கீகாரம் அடைந்தது கண்டு தெரிகிறது மென்மை ஏன் தன்னிலை மறந்து வானுக்கும் மண்ணுக்கும் துள்ளுகிறது என்று ! உன் அழகின் கணக்கில் சேர்ந்து கூட்டலோடும் பெருக்கலோடும் உறவாட வாய்ப்புக் கிடைத்ததைக் கண்டு விளங்குகிறது வேகமாய் நகரும் வாழ்க்கை ஏன் வெட்கிக் குனிந்து நிற்கிறது என்று ! மெதுவாய் மெத்தனமாய் நீ நகர்ந்து அதை நகைப்பதை உணர்ந்து உணர்கிறது உன் போல் பறவை இனம் எதற்காக பூமியில் உலவுகிறது என்று ! இது போன்ற கவிதை கரு உரு கொண்டு உன்னை ரசிக்க வேண்டும் என்று !