திருட்டு 48 - கவித்திருடன் கைதானான்
கைதானேன் ! கவிதைகளைத் திருடிய குற்றத்திற்காக , யாப்புக்குள் கவிதைகளை அடக்காததால் காப்புக்குள் என் கைகளை இட்டு இழுத்துச் சென்றனர் நீதிமன்றத்தில் நீதி விசாரணை நீதிபதி குற்றத்தைப் பட்டியலிட்டார் 'கவிதைகளைத் திருடியது' முதல் குற்றம் 'கவிதைப் பொதுச் சொத்து' என்றேன் 'உன் கவிதையில் இலக்கணம் இல்லை ' இரண்டாம் குற்றம் 'என் கவிதைக்கு இலக்கு உண்டு கனம் உண்டு இலக்கணம் தேவையில்லை ' என்றேன் திருடிய பொருளைத் திருப்பிக் கேட்டார் 'படித்தவர் மனதில் பதிந்துவிட்டது முடியாது' என்றேன் 'கர்வம் உனக்கு' என்றார் 'கவிஞனுக்கு இயல்பு'