Posts

Showing posts from January 15, 2017

திருட்டு 48 - கவித்திருடன் கைதானான்

Image
கைதானேன் ! கவிதைகளைத்  திருடிய குற்றத்திற்காக , யாப்புக்குள்                கவிதைகளை                 அடக்காததால் காப்புக்குள்                என் கைகளை                 இட்டு இழுத்துச் சென்றனர் நீதிமன்றத்தில் நீதி விசாரணை நீதிபதி குற்றத்தைப் பட்டியலிட்டார் 'கவிதைகளைத் திருடியது'                                              முதல் குற்றம் 'கவிதைப்  பொதுச்  சொத்து' என்றேன் 'உன் கவிதையில் இலக்கணம் இல்லை '                                              இரண்டாம் குற்றம் 'என் கவிதைக்கு                                        இலக்கு உண்டு                                                                               கனம் உண்டு                                       இலக்கணம் தேவையில்லை  ' என்றேன் திருடிய பொருளைத் திருப்பிக் கேட்டார் 'படித்தவர் மனதில்                  பதிந்துவிட்டது  முடியாது' என்றேன் 'கர்வம் உனக்கு'                   என்றார் 'கவிஞனுக்கு  இயல்பு'