Posts

Showing posts from March 2, 2017

திருட்டு 94 - கவிதை ஒலி !

Image
ஒலி சிறகின்றி ஊனமாய் நின்றது . தன் தொண்டைக் குழியில் ஊற்றிக் குழைத்து மொழி சமைத்தான் மனித மிருகம் ! ஒலியைச் செதுக்கினான் ! மூளைகளின் தூதுவனாய் ஒலி பதவி ஏற்றது ! மொழி ஆடை உடுத்திக்கொண்டது ! ஒரு நாள் காலத்தைக் கடக்கும் ஆசை கொண்டது மொழி ! தொழில்நுட்பத்தின் தோள் சாய்ந்து எழுத்தாய் படுத்துக் கொண்டது ! காலத்தை வென்றது ! மொழியின் வாழ்வில் ஒரு வினோத பிரச்சினை .. மூளைக்கு மட்டும் தான் தூது செய்வாயா என இதயம் உணர்வுகளைக் கொட்டி விண்ணப்பம் செய்தது ! பிறந்தது கவிதை ! ஒலி இரட்டைப்  பதவியேற்பு ஏற்றுக்கொண்டது ! மொழிக்கு மேல் கவிதை மேலாடை உடுத்திக் கொண்டது ! ஒலியால் உருவான கவி தன் திறத்தால் தனக்கென செதுக்கிக் கொண்டது இன்னொரு ஒலி கவிதை ஒலி ! கேட்கிறதா அந்தக் கவிதை ஒலி ?