திருட்டு 50 - சமர்ப்பணம்
கள்ளா என அழைத்து எனக்கு முதலில் திருடன் அங்கீகாரம் கொடுத்தவள் நான் திருடியக் கவிதைகளைப் பதம் பார்த்துக் கத்தரிப்பவள் அக்கறை ஒளிவிளக்கு ஏந்தி என் உடல் படகையும் மனக் கடலையும் இல்லறக் கரையில் உட்கார்ந்துக் கவனிப்பவள் காதல் தீபம் ஏந்தி என் வாழ்க்கையில் ஒளி சேர்ப்பவள் அவளுக்கு இந்த ஐம்பதாம் திருட்டு சமர்ப்பணம் தமிழ்த் தாய்க்கு மட்டுமல்ல என் திருட்டில் உனக்கும் பங்களிக்கிறேன் துணையே வா ! நம் பயணம் தொடர்வோம் !