திருட்டு 87 - மரணம் ஒரு ஊமைக் குசும்பன் !
மரணம் ஒரு ஊமைக் குசும்பன் ! சொல்லாமல் கொள்ளாமல் உயிரை வெல்லாமல் போகாதக் கொடூரக் குசும்பன்! கடவுளைக் கண்டு பயமில்லை எனக்கு நாத்திகம் சுவாசிப்பதால் ! மரணத்தைப் பார்த்தோ தினம் அஞ்சுகிறேன் ! காற்றைச் சுவாசிப்பதால் ! எந்நேரமும் குசும்பன் அதைப்பறிக்க முனைவான் என்பதால் ! என் வாழ்வின் கடன் நிமிடங்கள் வெட்டியாக வெட்டியானுக்கு இரையாகும் என்று அஞ்சுகிறேன் ! இந்தக் குட்டி வாழ்க்கையில் வெட்டி நிமிடங்களை வெறுக்கிறேன் கவிதையாய் அதைச் செதுக்க முனைகிறேன் மரணம் ஒரு ஊமைக் குசும்பன் ! என்னையும் கவிதை எழுத வைத்துவிட்டான் !