திருட்டு 5 - மழைக் கடவுள்
காகிதக் கப்பல் குட்டையினில்.. வெங்காயச் செடி தேங்காய்ச் சிறட்டையினில் .. மிளகாய் பஜ்ஜி மண்ணெண்ணை அடுப்பினில்.. அத்தனையும் , என் சிறுவன் பருவத்தில் உன்னால் படைக்கப்பட்டவை இன்று ஞாபகத்தில், கவிதையில் அதை திருடுகிறேன் யோசித்தால்.. இந்த ஞாபகத்திற்கும் கவிதைக்கும் கூட நீயே கடவுள்