Posts

Showing posts from February 5, 2017

திருட்டு 69 - நெய்தல் புதுக்கவிதை

Image
மீனின் கூற்று  கடலுக்குள்ளே சுத்திப்புட்டு - மீன் வலைக்குள்ளே  அகப்பட்டு உயிரக் கொடுத்து மாஞ்சோம்-  மனுஷ வயிறு நிரப்பச் செத்தோம் தலைவன் கூற்று பேரம் பேசி வாங்கி வந்தேன் - நல்ல காரம் போட்டுச் சமைக்கச் சொன்னேன் பெஞ்சாதி வச்ச மீன் குழம்ப - என் நெஞ்சார உண்டு அனுபவிச்சேன் தலைவி கூற்று  ஆசை மச்சான் ஆக்கிக் கேட்டு மீசை நனைக்க உண்ணும் போது சந்தோசம் நெஞ்சில் பூத்துப் போச்சு தந்தனத்  தாம் தாளம் போட்டிடுச்சு !