எழுத்துக்களை வைத்துத் தைத்து ஒரு குட்டிக் கவிதை ஆடை செய்தேன் உனக்காக ! என் குட்டிப் பயலே வா போட்டு விடுகிறேன் அய்யய்யயோ ! மறந்தே போனேன் ! உனக்கு ஆடை அணிவதே பிடிக்காதென்பதை !
இரு வெள்ளை வெல்லத்துண்டுகள் எடுத்துச் செதுக்கி நட்டாற் போல் இருக்கிறது இவன் கீழ் அடுக்கு பால் பற்கள் இரண்டும் ! ரசனை மயக்ககத்தில் இருந்த என் விரலை வாங்கி நறுக்கென கடித்தான் , தெரிந்தது அவை நங்கூரம் என்று !
Comments
Post a Comment