திருட்டு 134 - ஆத்தூரில் மியாவ்
ஒரு குட்டிக் கதை
சொன்னேன்
இரு வயதை இன்னும் எட்டாத
என் குட்டிப் பயலுக்கு
‘ஒரு ஊர்ல ஒரு மியாவ் இருந்துச்சாம்
அது மியாவ் மியாவ் என கத்திச்சாம்’
என ஆரம்பித்து ..
சில நாட்கள் கழித்து …
ஒரு குட்டிக் கதை
சொன்னேன்
எட்டு வயதை இன்னும் எட்டாத
என் குட்டிப் பெண்ணுக்கு
வழக்கம் போல்
இரவு தூக்கத்திற்குள்
அவளை
வழி அனுப்புவுதற்கு
பக்கதில்
ஒரு மெல்லிய குரல்
தேன் குழைத்து
இசை இணைத்து
சொன்னது
‘ஆத்தூர்ல மியாவ் ..
மியாவ் ..மியாவ்..’
தமிழ் குழைந்து
கதை
கவிதை ஆனது !
Comments
Post a Comment