திருட்டு 114 - முள்ளும் மலரும்
வெறுமையைத் திரையிடும்
தோற்றுப்போன தத்துவங்கள்
உயிரைத் துச்சமென
எச்சிலாய்த் துப்பும்
இயற்கையின் வேதனைகள்
மனிதத்தை மதிக்காத
மிருகத்தின் இச்சைகள்
முட்களின் பாரம்
வலிக்கிறது
கவிதை பேசும்
இயற்கை ஓவியங்கள்
மகிழ்ச்சிக்கு விரிவுரை
சொல்லும் மழலையின்
மந்திரங்கள்
அசாத்தியம் பேசும்
இளமையின் உத்வேகங்கள்
தேன் கரைக்கும்
அன்பின் ஆழங்கள்
மலரின் மென்மை
மயக்குகிறது
Comments
Post a Comment